2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!

உள்ளூர்August 18, 2026 · 2 hours முன்3
20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவராவார். 

இவர் 2013 ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உப-தயாரிப்பு தொழில்முனைவோராகவும் மதிப்பீடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான சுரன்ஜித் வேவிட்ட, உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உட்பட பல துறைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவராவார். 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களினால் நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தார்.