2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு.

உலகம்December 29, 2025 · 8 months முன்2
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு.

யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்சங்களைக் கொண்ட திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் யுக்ரைன் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, யுக்ரைன் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ருஸ்தம் உமெரோவ் மற்றும் யுக்ரைன் இராணுவ தலைமைத் தளபதி என்ட்ரி நாதோவ் கலந்து கொண்டனர்.

அதேபோல், அமெரிக்க தரப்பில் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கொஃப், அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.