2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எரிபொருள் இறக்குமதிக்கு கோடிகளில் செலவு செய்கிற இலங்கை

உள்ளூர்May 17, 2026 · 3 months முன்1
எரிபொருள் இறக்குமதிக்கு கோடிகளில் செலவு செய்கிற இலங்கை

உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அண்மைய மாதங்களில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகப் பாரிய தொகையைச் செலவிட்டுள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

 

இந்த ஆண்டு மே 6 மற்றும் மே 10 ஆகிய திகதிகளில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது அண்மைய இரண்டு டீசல் கப்பல்களையும் பொறுப்பேற்றுள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்கு புதிய கப்பல்கள் எதுவும் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனத் தெரியவருகிறது.

நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்பு தற்போதைக்கு போதுமானதாக உள்ள போதிலும், கொள்வனவுச் செலவுகள் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே காணப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.