2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விசேட சுற்றிவளைப்பு – ஒரே நாளில் 560 பேர் கைது!

உள்ளூர்February 15, 2026 · 6 months முன்2
விசேட சுற்றிவளைப்பு – ஒரே நாளில் 560 பேர் கைது!

நேற்று (14) நாடு முழுவதும் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது 560 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பொலிஸாரால் சுமார் 30,855 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 19 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த 312 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 113 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 374 ஓட்டுநர்களும், அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,102 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வாறான விசேட தேடுதல் பணிகள் நாடு முழுவதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.