2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சிறி AI தாமதம்: 250 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்!

தொழில்நுட்பம்May 7, 2026 · 3 months முன்3
சிறி AI தாமதம்: 250 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்!

சிறி குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை  வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பங்குதாரர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

 2024 ஆம் ஆண்டு பீட்டர் லேண்ட்ஷெஃப்ட் என்பவரால் கலிபோர்னியாவின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் (WWDC) ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை, அதே நாளில் வெளியிடப்பட்ட புதிய “iPhone” கைபேசிகளுடன் வழங்கத் தவறியமையே இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்தது.

 நிறுவனம் அந்த அம்சங்கள் குறித்து பெருமளவில் விளம்பரங்களை மேற்கொண்ட போதிலும், கைபேசிகள் சந்தைக்கு வெளியிடப்பட்ட போது அந்த அம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

 இந்தத் தாமதத்தினால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்களுக்கு பங்குதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.