2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

உலகத்திற்கு ஏற்படவுள்ள பேராபத்து : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

உலகம்August 22, 2025 · 12 months முன்0
உலகத்திற்கு ஏற்படவுள்ள பேராபத்து : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அண்டார்டிகா கண்டத்தில் இருந்து பனிப்பாறைகள் வரலாறு காணாத வேகத்தில் உருகி வருவது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது “காலநிலை மாற்றத்தின் திருப்புமுனையாக” (climate tipping point) இருக்கலாம் என்றும், இதன் விளைவுகள் உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தல்

சமீபத்திய ஆய்வுகள், அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள், குறிப்பாக “பைன் ஐலேண்ட்” மற்றும் “துவைட்டீஸ்” ஆகிய பனிப்பாறைகள், அதிவேகமாக உருகி வருகின்றன என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டு பனிப்பாறைகளும் உலகிலேயே கடல் மட்ட உயர்வுக்கு அதிக பங்களிப்பை அளிக்கின்றன.

இந்த பனிப்பாறைகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை எட்டும்போது, அவற்றின் உருகும் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என்றும், இது ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தி முழு அண்டார்டிகா கண்டத்தையும் உருகச் செய்யும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த பனி உருகும் நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இனி வருங்காலங்களில் அண்டார்டிகாவில் உள்ள அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், உலக கடல் மட்டம் பல மீட்டர்கள் உயரக்கூடும். இது நியூயோர்க், ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களை மூழ்கடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் மெதுவாக இருந்த இந்த பனி உருகும் நிகழ்வு, இப்போது அதன் வேகத்தை அதிகரித்துள்ளது.

இது மனித நடவடிக்கைகளாலும், பச்சை இல்ல வாயுக்களின் வெளியீட்டாலும் ஏற்பட்ட விளைவு என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.

அண்டார்டிகாவின் இந்த நிலை, இனி வருங்காலங்களில் உலகத்திற்கு என்ன காத்திருக்கிறது என்ற ஒரு பயங்கரமான கேள்வியை எழுப்பியுள்ளது.