சேவையிலிருந்து நீக்கப்பட்ட பஸ்கள் மீண்டும் சேவையில்

சேவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படவுள்ளன.பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக 2012 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து இந்த

பஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
இவற்றை 375 மில்லியன் ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பித்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவையில் இடம்பெற்ற இது தெடார்பான நிகழ்வில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, ஊழியர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்





