2026 September 3, Thursday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
மெஸ்ஸியின் விடைபெறலை கொண்டாடும் ஆர்ஜென்டீனா ரசிகர்கள்!வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன – சாணக்கியன்!ட்ரம்பின் உருவத்துடன் சிறப்பு 1 டொலர் நாணயம்!NPP உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் பரிசீலிக்க கோரிக்கை!உலக அரசியல் பதற்றம்; தங்கத்தை நகர்த்திய நெதர்லாந்து!அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை!நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்!5ஆம் தர புலமைப்பரிசிலில் தமிழ் மொழிமூலம் சாதனை!

நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்!

உள்ளூர்September 3, 2026 · 1 hour முன்5
நிலக்கரி கப்பல்கள் வந்ததும் மின் உற்பத்தி சீராகும்!

நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நிலக்கரி இருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். 

இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அவற்றில் முதலாவது கப்பல் நாளை (04) வந்தடையவுள்ளது. 

மற்றைய கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதுடன், குறித்த கப்பல்களிலிருந்து நிலக்கரியை இறக்கிய பின்னர் நிலக்கரி மூலம் முறையான மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். 

தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் மின் உற்பத்தி தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே புபுது ஜயகொட இதனை தெரிவித்தார்.