2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாகிஸ்தானில் 5 பேருடன் மாயமான விமானம்!

உலகம்July 8, 2026 · 1 month முன்2
பாகிஸ்தானில் 5 பேருடன் மாயமான விமானம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பயணித்த போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று திடீரென மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானத்தின் வழிகாட்டும் அமைப்பில் (Navigation System) கோளாறு ஏற்பட்டதாக விமானிகள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஐந்து பணியாளர்கள் பயணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘Flightradar24’ தரவுகளின்படி, கராச்சிக்கு தென்மேற்கே கடல் பகுதியை நெருங்கும்போது விமானம் தனது உயரத்தை அடிக்கடி மாற்றியதும், பின்னர் மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கியதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் எனப் பரவலாகச் சந்தேகிக்கப்பட்டாலும், இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானம் மற்றும் அதில் பயணித்த பணியாளர்களின் நிலை குறித்து மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.