2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி

உள்ளூர்January 22, 2026 · 7 months முன்2
5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி

ஐந்து புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கென தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவ கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் 83 கட்சிகள் பதிவுக்கென கோரியிருந்த நிலையில் இதில் 47 கட்சிகளே அதற்கான நேர்முக கலந்துரையாடலுக்க தெரிவு செய்யப்பட்டிருந்தன. இறுதி நேர்முக கலந்துரையாடலின் பின்னர் ஐந்து கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.