2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

நெல் கொள்வனவு தீவிரம்! 4 நாட்களில் 305 மெட்ரிக் தொன் அரசால் வாங்கப்பட்டது.

உள்ளூர்July 19, 2026 · 4 weeks முன்1
நெல் கொள்வனவு தீவிரம்! 4 நாட்களில் 305 மெட்ரிக் தொன் அரசால் வாங்கப்பட்டது.

சிறுபோகம் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, இதுவரையான காலப்பகுதியில் 305 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

 

அதன்படி, கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான 4 நாட்களுக்குள் இந்த நெல் தொகுதி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

 

இதுவரை அதிகளவிலான நெல் அறுவடை அம்பாறை மாவட்டத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு மேலதிகமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவிலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சிறுபோக நெல் கொள்வனவு பணிகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் பகுதிகளை மையப்படுத்தி நெற்களஞ்சியசாலைகளைத் திறந்து நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்திருந்தது.

 

அதற்கமைய, நெல் கொள்வனவு செய்யப்படவுள்ள விலைகளும் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில் ஒரு கிலோ நாடு நெல்லுக்கு 120 ரூபாயும், ஒரு கிலோ சம்பா நெல்லுக்கு 130 ரூபாயும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லுக்கு 140 ரூபாயும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த விலைகளின் கீழ் தற்போது 143 நெற்களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் தெரிவித்துள்ளார்.