2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மரக்குடிலுக்கு ஏறியபோது ஏணி முறிந்து ஒருவர் பலி!

உள்ளூர்February 24, 2026 · 6 months முன்1
மரக்குடிலுக்கு ஏறியபோது ஏணி முறிந்து ஒருவர் பலி!

கஹடகஸ்திகிலிய, கொக்எம்பே பிரதேசத்தில் மரம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

ஏணி முறிந்ததில் கீழே விழுந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.