2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உள்ளூர்March 24, 2026 · 5 months முன்2
போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மாலபே பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் உள்ளிட்ட 3 கிலோவிற்கும் அதிகளவான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாலபே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மாலபே கஹந்தோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 728 கிராம் ஹெரோயின், 1 கிலோ 171 கிராம் ஐஸ் மற்றும் 497 கிராம் குஷ் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை, கெகுணகஹவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.