2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகளில் ஏற்ற இறக்கம்

உலகம்April 1, 2026 · 5 months முன்3
மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகளில் ஏற்ற இறக்கம்

ஈரான் போர் தொடர்பான நிச்சயமற்ற சூழலால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் கடும் விலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் என சத்தம் ஹவுஸ் அமைப்பின் ஆய்வாளர் நீல் குல்லியம் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் சமீபத்திய முடிவுகள், போர் பதற்றம் விரைவில் தணியும் என்பதற்கான அறிகுறியாகத் தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்திலுள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

போர் சூழலில் நிலவும் பல அறியப்படாத காரணிகள் மற்றும் அதிகப்படியான நிச்சயமற்ற தன்மையால், எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஊசலாட்டத்திலேயே இருக்கும் என அவர் கணித்துள்ளார்.