2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

உலகம்March 23, 2026 · 5 months முன்1
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இன்று பாரிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட 7 ஆளில்லா வானூர்திகளை (Drones) அந்நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி மீண்டும் ஒரு புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைச் சுட்டு வீழ்த்தத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இரு நாடுகளும் அதியுச்ச பாதுகாப்பு விழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.