2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

கபில சந்திரசேன மரணம்: சம்பவ இடத்தில் கோட்டை நீதவான் நேரில் விசாரணை!

உள்ளூர்May 8, 2026 · 3 months முன்3
கபில சந்திரசேன மரணம்: சம்பவ இடத்தில் கோட்டை நீதவான் நேரில் விசாரணை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணைகளுக்காக கோட்டை நீதவான் தற்போது சம்பவ இடத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் அவர் உயிர் மாய்த்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் இன்று (08) கோட்டை நீதவான் பசந் அமரசேனவிடம் விடயங்களை முன்வைத்தனர்.

அவரது மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால், இது குறித்து சட்ட மருத்துவ அதிகாரியின் மரணப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை அவசியமென காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.