புகையிரதத்தில் மோதி பெண் பலி

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் வைத்து புகையிரதத்துடன், மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகத்தை சேர்ந்த குறித்தநபர் 44 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்துள்ளது.
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.