2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ☀️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

உலகம்May 7, 2026 · 3 months முன்0
பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!


போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதன் பின்னர், முதன்முறையாக இஸ்ரேல் லெபனானின் பெய்ரூட் நகரில் உள்ள ஹிஸ்புல்லாஹ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், கட்டிடம் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ரத்வான் படையணியின் தளபதி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தான் தனிப்பட்ட ரீதியில் அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் கூட்டமொன்றில் இருந்தபோது, அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இத்தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்ததன் பின்னர், பெய்ரூட் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.