2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!

உலகம்February 24, 2026 · 6 months முன்2
அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!

அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.

டொனால்ட் டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜெனீவாவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே ஜெனீவாவில் பெப்ரவரி 26ம் திகதி 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.