2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்வதேச தொழில்முறை விளையாட்டுப் போட்டி வீரர்கள் நாட்டிற்கு வருகை

உள்ளூர்February 16, 2026 · 6 months முன்2
சர்வதேச தொழில்முறை விளையாட்டுப் போட்டி வீரர்கள் நாட்டிற்கு வருகை

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தொழில்முறை விளையாட்டுப் போட்டியில் (International Professional Sports Tournament) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 80 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

உலகில் 143 நாடுகளைச் சேர்ந்த 24,000 விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் இப்போட்டித் தொடர் 02/06 முதல் 02/15 வரை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 34 இலங்கை விளையாட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்கள், 40 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 80 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற இந்த இலங்கை மெய்வல்லுநர் குழுவினர் அபுதாபியில் இருந்து ‘ஏர் அரேபியா’ (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான 3L-307 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 09.28 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.