2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்க ரஷ்ய ஜனாதிபதிகளிடையே தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை!

உலகம்April 30, 2026 · 4 months முன்1
அமெரிக்க  ரஷ்ய  ஜனாதிபதிகளிடையே தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த உரையாடலின் போது, உக்ரைன் போரில் ஒரு “சிறிய போர் நிறுத்தத்தை” மேற்கொள்ளுமாறு புதினிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் ஒரு நல்ல உரையாடலை நடத்தினோம்; உக்ரைனில் தற்காலிகப் போர் நிறுத்தம் செய்ய நான் பரிந்துரைத்தேன், அவர் அதைச் செய்வார் என்று நினைக்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் மே 9ல் நடைபெறும் ரஷ்யாவின் இரண்டாம் உலகப்போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தின்போது போர்நிறுத்தம் அறிவிப்பதாக புதின் உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.