2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பல மணிநேர பதற்றம்: நடுக்கடலில் சிக்கிய பயணிகள் கப்பல்!

உலகம்May 9, 2026 · 3 months முன்2
பல மணிநேர பதற்றம்: நடுக்கடலில் சிக்கிய பயணிகள் கப்பல்!

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல், நேற்று இரவு கடலில் பல மணிநேரம் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல், வழக்கமாக நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை அடைய வேண்டிய நிலையில், மோசமான கடல் நிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரவு 10.45 மணியளவிலேயே கரையை சென்றடைந்தது.

நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் உள்ள கல்லார் பகுதிக்கு அருகே வந்தபோது, கப்பலின் இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த நேரத்தில் கப்பலில் 144 பயணிகள் இருந்ததாகவும், தகவல் அறிந்த இந்திய அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் கடலில் தத்தளித்த கப்பல் மெதுவாக இழுத்து வரப்பட்டு பாதுகாப்பாக துறைமுகத்தை சென்றடைந்தது.

கப்பலில் இருந்த அனைத்து பயணிகளும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.