2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

எரிபொருள் பிரச்சினை வைத்தியசாலை சேவைகள் எச்சரிக்கை

உள்ளூர்March 17, 2026 · 5 months முன்1
எரிபொருள் பிரச்சினை வைத்தியசாலை சேவைகள் எச்சரிக்கை

எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, வருங்காலத்தில் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரித்துச் செல்வதில் கடும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 

சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வை தற்போதைய முறைமைக்குள் விரைவாக வழங்க வேண்டும் என அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகத் தலையீடு செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கும் அந்தச் சங்கத்தினால் எழுத்துப்பூர்வமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இதுவரை சுகாதார அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர் எவரும் இந்தப் பிரச்சினை குறித்து எந்தவிதக் கவனமும் செலுத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இதற்கமைய, நிலவும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.