2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்3
கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு  சிகரெட் பறிமுதல்

இலங்கைக்கு  புதுமடம் கடற்கரையில் இருந்து    படகில் கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.91 லட்சம் மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் மற்றும் சிகரெட்டை கடத்தி வர பயன்படுத்திய  வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த மெரைன் போலீசார் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இன்று (18) அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் புதுமடம் மெரன் போலீசார் மற்றும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு   படகில் கடல் வழியாக கடத்தல் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது  வாகனம் ஒன்றில் இருந்து மூட்டைகளை இறக்கி கடற்கரையில் பதுக்கி வைத்துக் கொண்டு இருந்ததை கண்ட மெரைன் போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும் முயன்ற போது அங்கு இருந்தவர்களில் சிலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் பிடித்து அங்கிருந்த சாக்கு முட்டைகளை சோதனை செய்தபோது 35 முட்டையில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் இருந்தது தெரிய வந்தது.

இந்த வெளிநாட்டு சிகரெட்கள் இன்று அதிகாலை   படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து புதுமடம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் (38)  என்பவரை கைது செய்த மரைன் போலீசார் வெளிநாட்டு சிகரெட் மற்றும் சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சுங்கத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

 பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் மதிப்பு ரூ. 91 லட்சம் எனவும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.