2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

யோஷித ராஜபக்ச வழக்கு தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

உள்ளூர்May 14, 2026 · 3 months முன்1
யோஷித ராஜபக்ச வழக்கு தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முன்னெடுக்க முடியாது என தெரிவித்து அவரது தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதவான் உதேஷ் ரணதுங்க தனது தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட “சதித்திட்டம்” என்ற வாதத்திற்கு போதுமான அடிப்படை ஆதாரம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில், யோஷித ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் விசாரிக்க எந்தவிதமான சட்டத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு செல்லும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.