உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள், இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில், 7 சிறைச்சாலை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் இவர்களுக்கான இறுதி மரியாதைகள் செலுத்தப்பட்டதன் பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.




