
admin
Jun 17, 2026
உள்ளூர்
விசாரணைக்கு ஆஜரான யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (17) காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





