
janani
Jun 16, 2026
உள்ளூர்
கம்பஹாவில் 19 மணிநேரம் நீர் விநியோகத் தடை!

அத்தனகல்ல கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (16) முற்பகல் 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கம்பஹா மாநகரம், மினுவாங்கொடை, நிட்டம்புவ, வேயங்கொடை, அத்தனகல்ல உள்ளிட்ட பல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும். எனவே, குறித்த பகுதி மக்கள் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





