Search

janani

Jul 30, 2026

உள்ளூர்

இலங்கையில் இந்த ஆண்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இவ்வாண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 84,091 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (29) எத்தகைய டெங்கு மரணங்களும் பதிவாகாத நிலையில், இவ்வருடத்தில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 61 ஆகும். அதிகூடிய எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் 17,850 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16,716 பேரும் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் மாத்திரம் 44,552 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், தென் மாகாணத்தில் இரண்டாவது அதிகபட்சமாக 12,656 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி நாட்டில் 175 அதி அபாய வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All