Oct 23, 2025
விளையாட்டு
அஸ்வினுக்கு பதில் சுந்தர்.
2026 ஆண்டு IPL தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2 ஆவது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் CSK அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.
CSK அணி இந்த ஆண்டு மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களை முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க CSK முயற்சி செய்து வருகின்றது.
அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க CSK அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. CSK அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








