Rebecca
Nov 16, 2025
விளையாட்டு
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
காய்ச்சல் காரணமாக அணித் தலைவர் சரித் அசலங்க இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக குசல் மெந்திஸ் இன்றைய போட்டியில் தலைவராகக் கடமையாற்றுவார்.
மேலும், வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இளம் வீரர் பவன் ரத்நாயக்க இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








