Search

SEGU

Nov 22, 2025

விளையாட்டு

LPL கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் ; பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக பிடியாணை!

2024 ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ( LPL ) கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2024 LPL கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய கிரிக்கெட் வீரர்களை தூண்டியதாக தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

பாகிஸ்தான் பிரஜை, இது தொடர்பான விசாரணைகளுக்காக விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவில் முன்னிலையாகாமல் இருப்பதால், அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை டிசம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp