Search

Rebecca

Nov 19, 2025

தொழில்நுட்பம்

AIயை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

“ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு இடம் உண்டு.

ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது.

வணிகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவை தரும் தகவல்களில் பிரச்சினை இருக்கலாம். எனவே ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All