
admin
May 23, 2026
தொழில்நுட்பம்
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடக கட்டுப்பாடு!

மலேசிய இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில், எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த அந்தநாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்வதையும், அவற்றை வைத்திருப்பதையும் கட்டுப்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும்.
அத்துடன், இணைய வழியிலான தவறான தகவல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படும்.
அந்த நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, சிறுவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாதுகாப்பை வழங்குவதற்கும், அதிக ஆபத்துள்ள இணைய சேவைகளின் பயன்பாட்டை அவர்கள் கட்டுப்படுத்துவதற்கும் இந்த புதிய நடைமுறை வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





