
janani
May 7, 2026
தொழில்நுட்பம்
சிறி AI தாமதம்: 250 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்!

சிறி குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பங்குதாரர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு பீட்டர் லேண்ட்ஷெஃப்ட் என்பவரால் கலிபோர்னியாவின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் (WWDC) ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை, அதே நாளில் வெளியிடப்பட்ட புதிய "iPhone" கைபேசிகளுடன் வழங்கத் தவறியமையே இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்தது.
நிறுவனம் அந்த அம்சங்கள் குறித்து பெருமளவில் விளம்பரங்களை மேற்கொண்ட போதிலும், கைபேசிகள் சந்தைக்கு வெளியிடப்பட்ட போது அந்த அம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தத் தாமதத்தினால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்களுக்கு பங்குதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





