Search

Sep 27, 2025

உள்ளூர்

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவித்தல்.

நாட்டில் 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், 2024 மற்றும் 2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை வங்கியின் எந்தக் கிளையிலும் அல்லது இணைய வழியினூடாகவும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 30ஆம் திகதிக்குப் பிறகு செலுத்தப்படும் வரி, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், அது தாமதமான செலுத்துதல்கள் என்று கருதப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், தாமதமாகக் செலுத்தப்படும் வரிகளுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் தள்ளுபடி செய்யப்படவோ, குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All