
admin
Jul 20, 2026
உள்ளூர்
முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட மனு நிராகரிப்பு!

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி 'வொரன்ட்' அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






