Search

admin

Jul 20, 2026

உள்ளூர்

நச்சு விதை உட்கொண்ட 22 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் என மருத்துவ அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.

கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All