Sep 29, 2025
விளையாட்டு
கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய அணி.
ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி கிண்ணத்தை வாங்க மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்திய வீரர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு 20 உலகக் கிண்ணப் போட்டியில் அப்போதைய இந்திய அணியின் தலைவர் ரோகித் கிண்ணத்தை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய அணியின் தற்போதைய தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கிரிக்கெட் சபை தலைவரிடமிருந்து ஆசிய கிண்ணத்தை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கிண்ணம் இந்தியா கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








