
janani
Jun 15, 2026
உள்ளூர்
இன்றைய காலநிலை!

இன்று மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல், ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், தென் மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





