
admin
Feb 26, 2026
விளையாட்டு
இன்றைய மோதல் - சிம்பாபேவுடன் இந்தியா

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது போட்டியில் சிம்பாப்வேயுடன் இன்று மோதுகிறது.
அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொள்ள, இந்தியா இந்த போட்டியில் வெல்ல வேண்டியது அவசியம் என்பதுடன், அதை மிகப்பெரிய வெற்றியாகப் பெற வேண்டும் என்பதே முக்கியமாகும்.
சூப்பா் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த மோசமான தோல்வியே இந்தியாவை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. எனவே, துடுப்பாட்டம் , களத்தடுப்பு என எந்தவொரு நிலையிலும் செய்யும் சிறு தவறும் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் நெருக்கடியில் இந்தியா உள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





