
janani
May 14, 2026
அரசியல்
புதுமைப்பெண் திட்டங்கள் தொடரும்; த.வெ.க அரசின் உறுதி!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் “தமிழ் புதல்வன்” மற்றும் “புதுமைப்பெண்” திட்டங்கள், புதிய த.வெ.க ஆட்சியிலும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கல்வி கற்று உயர்கல்வியில் இணையும் மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார சுமையை குறைத்து கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





