
admin
Jan 30, 2026
விளையாட்டு
இலங்கை - இங்கிலாந்து T- 20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. இந்த முதலாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்தத் தொடரில் 3 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலாவது போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று இரவு பல்லேகல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்தது.
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்குபற்றும் கடைசி இருபதுக்கு-20 தொடர் இதுவாகும்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 14 இருபதுக்கு-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 10 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணியானது 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக இருபதுக்கு-20 தொடரை ஒன்றை கைப்பற்றவில்லை.
அதேபோன்று, இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக ஒரு இருபதுக்கு-20 போட்டியில் வெற்றியீட்டியதும் 2014 ஆம் ஆண்டிலேயாகும்.
இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற கடந்த 8 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
இவ்வாறான தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






