
admin
Mar 7, 2026
விளையாட்டு
இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளைக் கொண்ட இத்தொடர், ஆப்கானிஸ்தான் அணியின் உபசரிப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா மற்றும் டுபாயில் நடைபெறவிருந்தது.
இருபதுக்கு 20 தொடருடன் ஆரம்பமாகவிருந்த இத்தொடரின் முதலாவது போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி சார்ஜாவில் நடைபெறவிருந்தது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





