Search

admin

Feb 9, 2026

விளையாட்டு

விளையாட்டுத் துறையை மேம்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு ஆசிய ரக்பி சம்மேளனம்

டுபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது மற்றும் விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல்-தலை மற்றும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் டுபாயில் உள்ள அல் பைத் மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் டுபாயை தளமாகக் கொண்ட முன்னணி விளையாட்டு அமைப்பான Sri Lions International நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கெலும் சுஜித் பெரேரா உட்பட அதன் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இலங்கையில் சர்வதேச ரக்பி போட்டிகளை ஏற்பாடு செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திறன் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All