
admin
Jun 2, 2026
விளையாட்டு
ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு அதிரடி தடை!

கடந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனனை நோக்கி ஆக்ரோஷமாக ஐஸ் பையை எறிந்த குற்றத்திற்காக, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துடுப்பாட்ட வீரர் டிம் டேவிட்டிற்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் 10ஆவது ஓவரில் விக்கெட் வீழ்ந்தபோது அவர் இவ்வாறு நடந்துகொண்டார்.
இதற்காக அவருக்கு போட்டித் தொகையிலிருந்து 50% அபராதமும், 2 தகுதிக்குறைப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன.
ஏற்கனவே இந்த சீசனில் ஒழுங்கீனங்களுக்காக புள்ளிகளைப் பெற்றிருந்த டிம் டேவிட்டின் மொத்த தகுதிக்குறைப்பு புள்ளிகள் 5 ஆக உயர்ந்ததால், ஐபிஎல் விதிகளின்படி இந்த ஒரு போட்டித் தடை தானாகவே அமுலுக்கு வந்துள்ளது.
இதனால் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், டிம் டேவிட் அடுத்த ஐபிஎல் 2027 தொடரின் முதலாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





