Search

janani

May 8, 2026

உள்ளூர்

கபில சந்திரசேன மரணம்: சம்பவ இடத்தில் கோட்டை நீதவான் நேரில் விசாரணை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணைகளுக்காக கோட்டை நீதவான் தற்போது சம்பவ இடத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் அவர் உயிர் மாய்த்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் இன்று (08) கோட்டை நீதவான் பசந் அமரசேனவிடம் விடயங்களை முன்வைத்தனர்.

அவரது மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால், இது குறித்து சட்ட மருத்துவ அதிகாரியின் மரணப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை அவசியமென காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All