Search

puja

Aug 5, 2026

உள்ளூர்

மகாவலி கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக, மகாவலி கங்ககைக்கு உட்பட்ட உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கங்க இஹல கோரள, கங்கவட கோரள மற்றும் ஹாரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே முக்கியமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடர்முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All