
admin
May 17, 2026
விளையாட்டு
மீண்டும் காயம்… பாதியில் வெளியேறிய மதீஷ பத்திரண

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, தனது முதலாவது போட்டியிலேயே மீண்டும் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போதே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் (Calf) காயம் காரணமாக, இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாடாத மதீஷ பத்திரணவை, கொல்கத்தா அணி ஏலத்தில் 18 கோடி ரூபாய் என்ற இமாலயத் தொகைக்கு வாங்கியிருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகக் களமிறங்கிய அவர், வெறும் 8 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் இடது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





