Search

Rebecca

Jan 14, 2026

விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் குறித்து வெளியான தகவல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6வது அத்தியாயம், எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தொடர் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இத்தொடருக்கான வீரர்கள் வரைவு மார்ச் 22ஆம் திகதி நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்தது.

எவ்வாறாயினும், இந்த வருடம் இலங்கை மற்றும் இந்தியாவின் இணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ள வு20 உலகக் கிண்ணத் தொடருக்காக மைதானங்களை தயார்படுத்தும் நோக்கில், இத்தொடரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All